சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-11-24 19:35 GMT
கோப்புப்படம்
சென்னை, 

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதியை நிலைநாட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதி வாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டையே தமிழக அரசும் மேற்கொண்டிருக்கிறது.

இதை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில் வருகிற சட்டசபை கூட்டத்தொடரில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்