ஓடும் காரில் திடீர் தீ விபத்து... குழந்தைகள் உட்பட 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்...!
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் காரில் திடீரென தீப்பற்றி எரிந்ததில் 9 பேர் நூலிழையில் உயிர் தப்பினர்.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பெருவாயில் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த மகேந்திரா ஸ்கார்பியோ காரில் திடீரென தீப்பற்றி எரிந்தது. காரில் இருந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் உடனடியாக வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.