கடலூரில் டெங்கு காய்ச்சல்; 9 பேருக்கு பாதிப்பு உறுதி
கடலூரில் டெங்கு காய்ச்சல் பாதித்த 9 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கடலூர்,
வடகிழக்கு பருவமழை துவங்கி மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த 2 மாதங்களில் 80க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
கடலூர் மாவட்ட தலைநகரான கடலூரில் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதித்துள்ள நிலையில் நேற்று 8 வயது சிறுமி உட்பட 9 பேர் புதிதாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர்.