மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 13,500 கன அடியாக உயர்வு

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாக உள்ளது.

Update: 2021-12-03 08:03 GMT
மேட்டூர்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்து வந்தது. அந்த வகையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வந்ததால், அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 11,500 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 10,500 கன அடியாக குறைந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 13,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேலும் அணையில் இருந்து 13,000 கன அடி நீர் உபரியாக திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்