நெல்லையில் “புத்தகங்களோடு புத்தாண்டு” என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி

வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இலவச புத்தகம் வழங்கி திருநெல்வேலியில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

Update: 2022-01-01 05:24 GMT
நெல்லை,

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில, ‘புத்தகங்களோடு புத்தாண்டு’ என்ற தலைப்பில் பாளையங்கோட்டை காந்தி சிலை அருகே புத்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் குழந்தைகளுக்கான சிறுகதைகள், வரலாற்று புத்தகங்கள், தொல்லியல் ஆய்வுகள் என 500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுட்த்தப்பட்டுள்ளன. 

மேலும் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் 30 குழந்தைகளுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். 

மேலும் செய்திகள்