14 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு அரசாணை வெளியீடு

14 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு அரசாணை வெளியீடு.

Update: 2022-01-02 20:40 GMT
சென்னை,

தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2004-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான கே.ஏ.செந்தில்வேலன், அவினாஷ்குமார், அஸ்ரா கார்க், ஏ.ஜி.பாபு, பி.செந்தில்குமாரி, ஏ.டி.துரைகுமார், சி.மகேஸ்வரி, என்.இசட்.ஆசையம்மாள், ஏ.ராதிகா, எஸ்.மல்லிகா, ஆர்.லலிதா லட்சுமி, பி.விஜயகுமாரி, எம்.வி.ஜெய கவுரி மற்றும் என்.காமினி ஆகிய 14 போலீஸ் டி.ஐ.ஜி.க்கள், ஐ.ஜி.க்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 14 அதிகாரிகளுக்கும், ஐ.ஜி. அந்தஸ்துக்கான பணி நியமன ஆணை விரைவில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் செய்திகள்