தமிழகத்தில் இன்று 16.25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன
சென்னை,
தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடைபெற்றது .
இது குறித்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;
தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16.25 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை 22 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார்