குரூப் 'B' மற்றும் குரூப் 'C' பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்- புதுச்சேரி அரசு

அரசு செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-17 10:13 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் கொரோனா 3-வது அலை பரவியுள்ளது. இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குரூப் 'B' மற்றும் குரூப் 'C' பிரிவு ஊழியர்கள் 50% பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும் என்று புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், அரசு செயலர்கள், அரசுத்துறையின் தலைவர்கள் முழுமையாக பணிக்கு வர வேண்டும் எனவும் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் தேவைப்பட்டால் பணிக்கு வரலாம்  எனவும் புதுச்சேரி அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்