தமிழ்ப்புத்தாண்டையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

தமிழ்ப்புத்தாண்டையொட்டி தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்.

Update: 2022-03-29 20:03 GMT
மதுரை,

தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி தென்னக ரெயில்வே தரப்பில் தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இந்த சிறப்பு ரெயில்(வ.எண்.06005) அடுத்த மாதம்(ஏப்ரல்) 13-ந் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து அடுத்த மாதம் 17-ந் தேதி மாலை 4.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில்(வ.எண்.06006) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும் செய்திகள்