தனியார் நிறுவன கணக்காளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
தனியார் நிறுவன கணக்காளர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டப்பட்டது.
ஓசூர்:
ஓசூர் கே.சி.சி. நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 40). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்புற கதவை திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்்து இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அட்கோ போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.