தமிழகத்தில் 25 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று புதிதாக 11 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-04-15 00:09 GMT
சென்னை,

தமிழகத்தில் நேற்று புதிதாக 11 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 பேர் உள்பட 10 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. 28 மாவட்டங்களில் யாரும் புதிதாக பாதிக்கப்பட்டவில்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 முதியவர்களுக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி, விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

தமிழகத்தில் நேற்றையை நிலவரப்படி 22 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து 28-வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பும் இல்லை. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 23 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் 230 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்