மனைவியை கொலை செய்து நாடகமாடிய ஆட்டோ டிரைவர் கைது...!

சென்னை அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-23 15:30 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த கண்ணகி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் புகழ்கொடி(வயது29). இவரது மனைவி சரிதா (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி தனது ஆட்டோவில் சரிதாவை ராயபேட்டை அரசு மருத்துவமனையில் தண்ணீர் குடம் கொண்டு செல்லும் போது விழுந்ததாக தெரிவித்து மருத்துவமனையில் கணவன் புகழ்கொடி சேர்த்து உள்ளார். 

அங்கு சிகிச்சை பெற்றுவந்த சரிதாவின் அக்கா ஸ்ரீலஷ்மி சரிதா காயத்தில் சந்தேகம் உள்ளதாக ராயபேட்டை மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலைய போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.

இது பற்றி கண்ணகி நகர் போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். பின்னர், கண்ணகி நகர் போலீசார் சரிதாவின் கணவர் புகழ்கொடியை அழைத்து விசாரித்தனர். இந்த நிலையில் மருத்துவ மனையில் இருந்த சரிதா இன்று மதியம் சிக்கிசை பலனின்றி உயிரிழந்தார்.

தற்போது கணவன் புகழ்கொடியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல உண்மைகள்  வெளிவந்து உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

மனைவி சரிதா கடந்த 17-ந் தேதி இரவு ஜெகதீசன் என்பருடன் செல்போனில் பேசியுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த கணவன் புகழ்கொடி சரிதாவை தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார். 

தற்போது சரிதா இறந்து உள்ளதால் கணவன் புகழ்கொடி மீது கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்