மோட்டார் சைக்கிள் திருட்டு
முதலியார்பேட்டையில் ஜவுளிக்கடை ஊழியரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் தேடி வருகின்றார்.
முதலியார்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி (வயது 34). ஜவுளிக்கடை ஊழியர். சம்பவத்தன்று இவர், மாகி தி லபோர்தெனே வீதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடற்கரைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்மநபர்கள் யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.