தாய், மகள் மீது வழக்குப்பதிவு

வில்லியனூர் அருகே ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தாய், மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனா்.

Update: 2022-05-17 18:32 GMT
வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி பகுதியை சேர்ந்தவர் சாந்தா (வயது 40). இவர், அப்பகுதியை சேர்ந்த ருக்குமணி (65), அவரது மகள் தமிழ்பிரியா (32) ஆகியோரிடம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏலச்சீட்டு கட்டிவந்தார். சீட்டு முடிந்த நிலையில், அதற்கான தொகையை சாந்தா உள்ளிட்ட பலருக்கு ருக்குமணி திருப்பி கொடுக்கவில்லையாம்.
இந்தநிலையில் சாந்தா, தனக்கு சேரவேண்டிய ஏலச்சீட்டு பணம் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை வழங்கக்கோரி போலீசில் புகார் அளித்தார். ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. 
இதுதொடர்பாக  நீதிமன்றத்தில் சாந்தா மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏலச்சீட்டு நடத்திய ருக்குமணி, தமிழ்பிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்