உத்தங்குடி பகுதியில் 26-ந்தேதி மின்தடை

பராமரிப்பு பணிகளுக்காக உத்தங்குடி பகுதியில் 26-ந்தேதி மின்தடை ஏற்படுகிறது.

Update: 2023-10-22 18:45 GMT

மதுரை,

மதுரை இலந்தைகுளம் துணைமின்நிலையத்தில் வருகிற 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளான இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்காட், கணிமாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலை நகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ஸ்ரீராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.விட்டி, கிளாசிக் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 26-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்