3 பேர் கைது

விவசாய கருவிகள் திருட்டு வழக்கில் 3 பேர் கைது

Update: 2022-08-05 22:43 GMT

அம்பை:

அம்ைப பண்ணை சங்கரைய்யர் தெருவை சேர்ந்தவர் வைரமுத்து (வயது 74). இவர் சின்ன சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது வயலில் நெல் நடவு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது வயலில் நிறுத்தியிருந்த பவர் டிரில்லர், மின்மோட்டார் மற்றும் காப்பர் வயர்கள் திருட்டு போயிருந்தது. இதுதொடர்பாக வைரமுத்து அம்பை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் விசாரணை நடத்தினார். திருட்டு தொடர்பாக பொட்டல் பகுதியைச் சார்ந்த சிவலிங்கம் (25), தளபதி (20), சிவமூர்த்தி (19) ஆகிய மூவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்