தொழிலாளிக்கு 3 ஆண்டு ெஜயில்

தொழிலாளிக்கு 3 ஆண்டு ெஜயில் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2023-04-25 19:12 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

சிவகாசியை அடுத்துள்ள மாரநேரியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 24). கூலித்தொழிலாளியான இவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவகாசி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து பாண்டியராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்