தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

மரக்காணம் அருகே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-23 18:45 GMT

தொடர் வழிப்பறி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா வத்தலக்குண்டு காமராஜர்புரத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரன் மகன் தனுஷ் (வயது 19), முருகன் மகன் யோகேஷ் (19), முஜிபூர் ரகுமான் மகன் ஷேக் அப்துல்லா (21). இவர்கள் மீது விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த சில மாதத்திற்கு முன்பு தொடர் வழிப்பறி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தனுஷ், யோகேஷ், ஷேக்அப்துல்லா ஆகிய 3 பேரையும் மரக்காணம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தொடர்ந்து, இவர்கள் 3 பேரும் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தனுஷ், யோகேஷ், ஷேக்அப்துல்லா ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மரக்காணம் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்