புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு 'சீல்'

விருத்தாசலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Update: 2023-10-22 18:45 GMT

விருத்தாசலம், 

கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் விருத்தாசலம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 5 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 5 கடைகளுக்கும் அபராதம் விதித்தனர். மேலும் 5 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதேபோல் ஓட்டல்களிலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 3 ஓட்டல்களில் இருந்த கோழி இறைச்சி மற்றும் மீனில் செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த ஓட்டல்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்