சென்னை விமான நிலையத்தில் ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் 2 இலங்கை பெண்கள் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 326 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-23 04:53 GMT

சென்னை விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து ெசன்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 467 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

ரூ.66 லட்சம் தங்கம் பறிமுதல்

இதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை பெண்கள், தங்கள் உள்ளாடைகளில் தங்க நகைகள், தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் 859 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 இலங்கை பெண்கள் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.66 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 326 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்