அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகள் பிடிபட்டன
அதிக பாரம் ஏற்றிய 7 லாரிகள் பிடிபட்டன
நாங்குநேரி:
நாங்குநேரி ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் இரவு நாங்குநேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக அதிக கல்பாரம் ஏற்றிவந்த 7 லாரிகளை மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக அந்த லாரி டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.