அரசு பள்ளி ஆசிரியரை கடத்தி தாக்கிய 6 பேர் மீது வழக்கு

அரசு பள்ளி ஆசிரியரை கடத்தி தாக்கிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2023-06-22 00:15 IST

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் குமார் (வயது 45). செம்மணங்கூரில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்விரோத தகராறு காரணமாக உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ், பாலச்சந்தர், அரவிந்தராஜ் உள்பட 6 பேர் குமாரை வழிமறித்தனர். பின்னர் அவரை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று தாக்கியதாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆசிரியர் குமாரை மீட்டனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் தப்பிச்சென்ற பிரகாஷ் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்