கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த ஆடு உயிருடன் மீட்கப்பட்டது.

Update: 2023-10-21 18:31 GMT

ஆலங்குடி அருகே வெள்ளாளவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி கனகரத்தினம். இவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் அப்பகுதிைய சேர்ந்தவரின் ஆடு தவறி விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் குழந்தைராசு தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் கயிறு கட்டி இறங்கி ஆட்டை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்