கிணத்துக்கடவு அருகே மயங்கி விழுந்த தொழிலாளி திடீர் சாவு

கிணத்துக்கடவு அருகே மயங்கி விழுந்த தொழிலாளி திடீர் சாவு

Update: 2022-12-11 18:45 GMT

கிணத்துக்கடவு

ஜார்கண்ட் மாநிலம், ஜெர்கட்டா பகுதியைச் சேர்ந்தவர் அட்வாமுண்டா (வயது 27). இவர் கிணத்துக்கடவு அருகே உள்ள பொட்டையாண்டி புறம்பு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று எலக்ட்ரிக் ஒயர்களை இணைக்கும் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அட்வாமுண்டா திடீரென மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்த மற்ற நபர்கள் உதவியுடன் அட்வாமுண்டாவை தனியார் வாகனத்தில் ஏற்றி ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது அவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிகிச்சைக்கு வரும் வழியிலே அட்வாமுண்டா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்த அட்வாமுண்டா உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்