ஒழுங்காக படிக்கும்படி தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

ஒழுங்காக படிக்கும்படி தாய் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-28 07:48 GMT

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம், எஸ்.எஸ். கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன். இவர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு ராகுல் (13), தக்சன் (10) என 2 மகன்கள்.

நேற்று காலை வழக்கம்போல் சரவணன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் பிரேமா மற்றும் 2 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் ராகுல், மதியம் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். நீண்டநேரம் ஆகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த பிரேமா கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தனது மகன் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த மாங்காடு போலீசார், தூக்கில் தொங்கிய ராகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ராகுல், தற்போது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9-ம் வகுப்பு செல்ல இருந்தார். ஆனால் அடிக்கடி அவர் செல்போனில் கேம் விளையாடி வந்துள்ளார். இதனால் அவருடைய தாய் பிரேமா, செல்போன் பார்ப்பதை விட்டுவிட்டு இனிமேல் ஒழுங்காக படிக்க வேண்டும் என மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த ராகுல் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் ெதரிவித்தனர்.

எனினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்