மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகை பறிப்பு

மொபட்டில் வந்த பெண்ணை கீழே தள்ளி நகையை பறித்துச் சென்றவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Update: 2023-09-09 19:15 GMT

காரைக்குடி

காரைக்குடி அருகே உள்ள கல்லூர்-உசிலம்பட்டியை சேர்ந்தவர் அமிர்தம் (வயது 46).இவர் உசிலம்பட்டியில் இருந்து பள்ளத்தூருக்கு தனது உறவினரை பார்க்க மொபட்டில் வந்து கொண்டிருந்தார். பள்ளத்தூர் போலீஸ் சரக எல்லையை நெருங்கிய போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் அமிர்தத்தை மொபட்டோடு கீழே தள்ளினார். பின் கீழே விழுந்த அமிர்தம் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு அவர் தப்பிவிட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் பள்ளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்