மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதி தொழிலாளி பலி

மோட்டார் சைக்கிள் மீது மொபட் மோதி தொழிலாளி உயிரிழந்தார்.

Update: 2023-05-05 19:08 GMT

தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம், சோழதரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 41). இவர் கட்டிட பணிக்கான கம்பி கட்டும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாக்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

காடுவெட்டி அருகே உள்ள அணுகுசாலையில் சென்றபோது திடீரென தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே கடலூர் மாவட்டம், சிதம்பரம் நேரு நகரை சேர்ந்த அண்ணாமலை(51), இவருடைய மகன் வினோத் (24) ஆகியோர் வந்த மொபட், சுரேஷ்குமார் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தை-மகன் காயம்

காயமடைந்த வினோத், அண்ணாமலை ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து, சுரேஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்