நல்லம்பள்ளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து ஐஸ் வியாபாரி பலி

நல்லம்பள்ளி அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து ஐஸ் வியாபாரி பலியானார்.;

Update:2023-06-04 00:17 IST

நல்லம்பள்ளி:

தர்மபுரி மாவட்டம் சின்னதடங்கம் பகுதியை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 55). இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் கோவில் திருவிழாவில், ஐஸ் வியாபாரம் முடித்துவிட்டு, மீண்டும் சொந்த கிராமத்திற்கு வாகனத்தில் திரும்பி வந்தார். அதியமான்கோட்டை அருகே உள்ள வானொலி நிலையம் முன்பு சரக்கு ஆட்டோ வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கோபால்சாமி உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்த கோபால்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்