18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோர்கள் மீது நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

Update: 2022-06-18 19:01 GMT

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கரூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், வாகனத்தை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும். இதேபோன்று நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். மேலும் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மது அருந்திவிட்டு ஓட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து சிறை தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகளை வாகனம் ஓட்ட அனுமதித்தால் சிறார்களின் பெற்றோர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்