கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை..யார் வந்தாலும் வரவேற்போம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி

2024 மக்களவைத் தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

Update: 2024-03-20 04:52 GMT

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:

2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 3 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க. வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத்தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.




Tags:    

மேலும் செய்திகள்