அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள்

அ.தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2023-09-18 19:03 GMT


விருதுநகர் செந்தி விநாயகபுரம் தெருவில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், அ.தி.மு.க. தான் மக்கள் நலன் சார்ந்த கட்சி. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி தரம் உயர்த்தப்பட்டது. மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 35 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. வாக்குறுதி அளித்தபடி அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்காமல் 50 சதவீதத்திற்கும் குறைவான மகளிருக்கு தான் உரிமைத்தொகை வழங்கியுள்ளது. எனவே வரவிருக்கின்ற நாடாளுமன்றத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு வாக்களித்து அ.தி.மு.க. தான் தமிழகத்தின் முதன்மை கட்சி என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க. கொடி ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மற்றும் சாத்தூர் பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்