தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம்

தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம் என மின் வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

Update: 2023-08-27 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மின் வாரிய செயற்பொறியாளர் குருசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

முதல்-அமைச்சர் ஆணையின்படி சிவகங்கை மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெரும் வகையில் தட்கல் மின் இணைப்பு வழங்கல் திட்டம் மின்வாரியத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே மாவட்டத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விவசாயிகள் தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்