டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட மதுப்பிரியர்கள்

டாஸ்மாக் கடையை மதுப்பிரியர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-08-05 19:34 GMT

ஆலங்குடி அண்ணா நகரில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை வழக்கம்போல் நண்பகல் 12 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று டாஸ்மாக்கடை திறக்க காலதாமதமானதால் மதுப்பிரியர்கள் அந்த கடையை முற்றுைகயிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த கடை 1 மணி நேரம் தாமதமாக திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை உற்சாகமாக வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்