பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி

ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Update: 2022-05-21 18:45 GMT

ராமநாதபுரம், 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக மாவட்ட பொருளாளரும், நகர் மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் கோபால் தலைமையில் ராஜீவ்காந்தி உருவ படத்திற்கு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாத எதிர்ப்புதின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதில் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் வாணி செய்யது இப்ராகிம், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் திருமுருகன், வட்டார தலைவர்கள் காருகுடி சேகர், மனோகரன், சேதுபாண்டியன், கீழக்கரை நகர் தலைவர் அஜ்மல் உட்பட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்