பரமத்திவேலூர் அருகேஇருதரப்பினர் தகராறில் 4 பேர் கைது

Update: 2023-07-23 19:00 GMT

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே உள்ள மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவருடைய மகன் மனோஜ் (21). இவர் நேற்று முன்தினம் தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்றார். அப்போது அங்கிருந்த மாயவன் (54) என்பவருக்கும், மனோஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே மனோஜ், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் (18), கொமராபாளையத்தை சேர்ந்த தீபன்ராஜ் (28), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (32) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் சேர்ந்து மாயவன், அவருக்கு ஆதரவாக தட்டிக்கேட்ட கிருஷ்ணன் (42), வரதம்மாள் (60), ராசாயி (60) ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த 4 பேரும் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கிருஷ்ணன் வேலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், ஈஸ்வரன், தீபன்ராஜ், சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவான 17 சிறுவனை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்