சாராயம் காய்ச்சியவர் கைது

வெப்படை அருகே சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-01-01 00:15 IST

பள்ளிபாளையம்

வெப்படைஅருகே எளையாம்பாளையத்தில் சாராயம் காய்ச்சுவதாக வெப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வெப்படை போலீசார் எளையாம்பாளையம் சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கு ராமசாமி (வயது 50) என்பவர் வீட்டின் அருகே சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் ராமசாமியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்