ஆத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-சிறுவன் உள்பட 2 பேர் கைது

ஆத்தூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை-சிறுவன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-12 19:53 GMT

ஆத்தூர்:

ஆத்தூர் கடைவீதி பாரதியார் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 21). இவரும், அதே பகுதிைய சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் சேர்ந்து, 7-ம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதனை அந்த மாணவியின் பெற்றோர் தட்டி கேட்டதற்கு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அந்த மாணவியின் தாய் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சகுந்தலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்