ஏரியூர் அருகேவாய்த்தகாறில் விவசாயியை தாக்கிய 2 பேர் கைது

Update: 2023-04-07 19:00 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே ஆத்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 60). விவசாயி. இவர் கடந்த 30-ந் தேதி குடும்பத்தினருடன் நடந்து சென்று கொன்டிருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஆத்துக்காடு பகுதியை சேர்ந்த செல்வம் (55) மற்றும் சரவணன் (19), சதீஷ் (18) ஆகியோர் வேகமாக வந்தனர்.

அப்போது கோபாலுக்கும், மோட்டார் சைக்கிளில் வந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கோபால் மற்றும் அவருடைய உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசி கோபாலை தாக்கினர். இதில் காயமடைந்த கோபால் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பெரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வம், சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சதீசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்