ஓசூர் அருகே போலி டாக்டர் கைது

Update: 2023-04-09 18:27 GMT

ஓசூர்:

கர்நாடக மாநிலம் சர்ஜாபுராவை சேர்ந்தவர் முகமது ஷபி (வயது 70). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூரில் மருந்தகம் வைத்துள்ளதுடன் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதுகுறித்த புகாரின்பேரில் பாகலூர் வட்டார மருத்துவ அலுவலர் சோமசுந்தரம் தலைமையிலான குழுவினர் நேற்று அதிரடியாக முகமது ஷாபியின் மருந்தகத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது முகமது ஷபி 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் படிக்காமல் நீண்ட காலமாக ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் முகமது ஷபியை பாகலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்