திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-09-17 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசித்தார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, உதவியாளர்கள் சிலுவைரோஸ் மேரி, மதன், மகாலட்சுமி வினிதா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறைகளில் பேராசிரியர்கள் முன்னிலையில், சமூகநீதி நாள் உறுதிமொழியை ஏற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்