ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து சாவு

திண்டிவனத்தில் ஆட்டோ டிரைவர் மயங்கி விழுந்து இறந்தாா்.

Update: 2023-03-25 18:45 GMT

திண்டிவனம்:

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரை சேர்ந்தவர் முனுசாமி. ஆட்டோ டிரைவர். இவர் திண்டிவனம் மேம்பாலம் அருகில் ஆட்டோவை ஓட்டி வந்தார். திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சாலையோரத்தில் ஆட்டோவை நிறுத்தி மயங்கி விழுந்து இறந்தார். மாரடைப்பால் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து திண்டிவனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்