நாளை மதுக்கடைகள் மூடப்படும்

நாளை மதுக்கடைகள் மூடப்படும் என கிருஷ்ணகிரி கலெக்டர் தெரிவித்துள்ளார்.;

Update:2023-09-27 01:00 IST

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003-12-வது விதியின் படி, நபிகள் நாயகம் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 28-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் விற்பனை இல்லா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக்), மதுக்கூடங்கள் மற்றும் மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள மதுவிற்பனை நிலையங்கள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மூடப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்றாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்