ஏசியில் இருந்து வெளியேறிய கரும்புகை: தாய், மகள் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

சென்னை அம்பத்தூரில் ஏசியில் இருந்து கரும்புகை வெளியேறியதால் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-09-30 06:46 GMT

சென்னை,

சென்னை அம்பத்தூர் அருகே ஏகாம்பரம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அகிலா. அவரது மகள் நஸ்ரிபேகம். அவர்கள் இருவரும் நேற்று இரவு படுக்கை அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது அந்த அறையில் இருந்த ஏசியில் மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏசியிலிருந்து கரும்புகை வெளியேறியது.

இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டதில் தாய், மகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்