புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை - மு.க.ஸ்டாலின்

புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Update: 2024-04-23 10:43 GMT

சென்னை,

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், புத்தக தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

புதிய உலகத்திற்கான திறவுகோல் - அறிவின் ஊற்று - கல்விக்கான அடித்தளம் - சிந்தனைக்கான தூண்டுகோல் - மாற்றத்திற்கான கருவி - மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனித சமுதாயத்தை தழைக்கச் செய்யும் கொடை. புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்.

புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் - நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும். நல்வழி பிறக்கட்டும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்