தீக்காயமடைந்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி சாவு

தீக்காயமடைந்த புதுப்பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-01-27 18:23 GMT

புதுக்கோட்டை பிச்சதாம்பட்டி நரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி அஞ்சலி (வயது 23). இவர்கள் இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் புதுமண தம்பதி கீரனூர் அருகே உள்ள கீழநாஞ்சூரில் உள்ள செல்வகுமார் சகோதரி முத்துலட்சுமி வீட்டுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். பின்னர் அஞ்சலி வீட்டில் உள்ள விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்தது. இதையடுத்து தீக்காயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஞ்சலி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்