முழு அடைப்பு போராட்டம் நிறைவு:ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு மாலையில் பஸ்கள் இயங்கின

Update: 2023-09-29 19:00 GMT

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு தமிழக அரசு பஸ்கள் இயங்க தொடங்கியது. ஆனால் இந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பொதுமக்கள் பயணம் செய்தனர். மேலும் பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்