மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; வாலிபர் சாவு

செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-18 11:20 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பல்லி கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் அருண் (வயது 21). இவர், தனது நண்பரை பார்க்க மோட்டார் சைக்கிளில் தும்பை கிராமத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு செல்ல செய்யாறில் இருந்து காஞ்சீபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து செய்யாறு நோக்கி வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அருண் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்