சரக்கு வேன் மோதி தொழிலாளி பலி

சரக்கு வேன் மோதி தொழிலாளி பலியானார்

Update: 2022-06-06 20:29 GMT

மணப்பாறை, ஜூன்.7-

மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 49). இவர் மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் பூசாரிபட்டியில் மின்வாரியம் தொடர்பான வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் பொத்தமேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி - திண்டுக்கல் சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது, பின்னால் வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்த போது ஏற்கனவே அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்