இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு

இடப்பிரச்சினையில் பெண்ணை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-06-27 18:48 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த செல்லதுரை மனைவி சத்தியபிரியா(வயது 30). இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் ஜெயராமன் மகன் பாலகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் நேற்று பாலகிருஷ்ணனுக்கும், சத்தியபிரியாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சத்தியபிரியாவை தகாதவார்த்தைகளால் திட்டி பாலகிருஷ்ணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சத்தியபிரியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்