முதியவரை தாக்கி செல்போன், பணம் பறிப்பு

ஈரோட்டில் முதியவரை தாக்கி செல்போன், பணம் பறிக்கப்பட்டது.

Update: 2022-06-20 21:02 GMT

ஈரோடு:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 60). இவர் ஈரோடு முத்தம்பாளையம் 3-வது பகுதியில் வசிக்கும் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். வேலுசாமி கடந்த 18-ந் தேதி இரவு ராஜபாளையத்துக்கு செல்வதற்காக முத்தம்பாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் வேலுசாமியை தாக்கி கீழே தள்ளி விட்டு, அவரிடம் இருந்த செல்போன், 410 ரூபாயை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து வேலுசாமி கொடுத்த புகாரின்பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன், பணத்தை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்